Monday, May 31, 2021

மரம்

 இறைவனின் அருட்கொடை - உலக

இயக்கத்தின் பெரும்படை

நிழல்தரும் நெடுமாடம் - பலரின்

பசியாற்றும் அட்சயபாத்திரம்


மழையின் உண்மைகாதலன் - மண்

அரிப்பைத் தடுக்கும் பாதுகாவலன்

கண்ணிற்குக் குளிர்ச்சிதரும் சாதனம் - ஊற்றெடுக்கும்

கவிதை பிறப்புக்கு நீயே காரணம்


மழலைகளின் விளையாட்டு ராட்டினம் - பல

உயிர்களுக்கு நீயே புகலிடம்

வெயில் வாட்டி வதைக்கும்போதே - வருகிறது

புத்திக்கு உந்தன் ஞாபகம்


நீ உள்ள வரைதான் உலக இயக்கம் - இனி

நீரின்றியே எப்படி மனிதம் தழைக்கும் 

தாயினும் சிறந்தது உனதன்பு - தவறு

செய்வோர்க்கும் நன்மையளிப்பதே உனதியல்பு


வீழ்த்தினாலும் வீழ்ந்திடாத நீ - வீறுகொண்டு

எழுகின்ற இயற்கை சேவகன்

சிலர் மரமானதால் மறந்தார் - நீயோ

மரமானாலும் அறமாய் வாழ்கிறாய்.


 

குடிசை வாசிகள்

  நவீன மயமாக்கப்பட்ட நகர வீதியின் பூர்வகுடிகள் மழை பெய்து விட்டால் வானத்தின் கருமேகங்கள் எல்லாம் வந்துவிடும் வீதிகளில் ...